வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழக மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழக மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 2009-ம் ஆண்டு பிப்.19-ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் வழக்கறிஞர்கள் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆண்டுதோறும் பிப்.19-ம் தேதியைக் கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் நீதிமன்ற பணிகளையும் புறக்கணித்து வருகின்றனர்.

தொடர்ந்து இந்தாண்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் பிப்.19-ம் தேதி கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் எனவும், தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்குப் பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது எனக் கூறினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...