வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மகளின் உடலை மீட்டுத் தர வலியுறுத்தல்

வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தங்களது மகளின் உடலை மீட்டு தர வலியுறுத்தி அவரது பெற்றோர்கள் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : வங்கதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தங்களது மகளின் உடலை மீட்டு தர வலியுறுத்தி அவரது பெற்றோர்கள் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவரது 17 வயது மகள் பூர்ணாதேவியை  கடந்த 2016-ம் ஆண்டு மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த ரிமுஷேக் என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாகவும், இருவரும் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பூர்ணாதேவி அவ்வப்போது தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி முருகானந்தத்திற்க்கு அழைத்த ரிமுஷேக், பூர்ணாதேவி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

மகளின் மரணத்தில் சந்தேகமடைந்த முருகானந்தம், செல்வ கோமதி தம்பதியினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமாவிடம் தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்தனர். அதனடிப்படையில், திருப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ரிமுஷேக், பூர்ணாதேவி இடையே கடந்த 9-ம் தேதியன்று சண்டை நடந்துள்ளதாகவும், இதனையடுத்தே புர்ணாதேவி இறந்துள்ளதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் தெரியவந்துள்ளது. மேலும், பூர்ணாதேவியின் உடலைக் கைப்பற்றிய வங்கதேச போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதும் திருப்பூர் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தங்களது மகள் உடலை சொந்த ஊரான திருப்பூருக்கு கொண்டு வர வேண்டும், தனது மகள் மரணத்தில் உள்ள சந்தேகங்களை கலைய வேண்டும், தங்கள் மகள் இறப்பிற்கு காரணமான ரிமுஷேக்கிற்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பூர்ணாதேவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் மனு அளிததனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...