சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டது முதல் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது வரை...!

சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டது முதல் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது வரை...!

• 2017 பிப்ரவரியில், சென்னை முகலிவாக்கம் அருகே, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி மாயமானார்.

* சிசிடிவி காட்சிகளை வைத்து அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.



* விசாரணையில் ஹாசினியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார் தஷ்வந்த்.

* சம்பவத்தின்போது, ஹாசினி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி தஷ்வந்த் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.



* ஹாசினியின் உடலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார் தஷ்வந்த். 

* இதையடுத்து தஷ்வந்த கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

* தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

* தஷ்வந்த் கைது செய்யப்பட்டு 3 மாதத்துக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



* ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் குன்றத்தூரில் வசித்து வந்த பெற்றோருடன் தங்கியிருந்தார்.

* இந்நிலையில், 2017 டிசம்பரில் தஷ்வந்தின் தாயார் சரளா கொலை செய்யப்பட்டார். மேலும், நகைகள் கொள்ளை போயிருந்தது.

* போலீசார் விசாரணையில் நகைக்காக பெற்ற தாயை தஷ்வந்த கொன்றது தெரியவந்தது.



* இதையடுத்து, மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

* அப்போது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தஷ்வந்த் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* தப்பிய தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்தனர், தாய் சரளாவை கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.



* செங்கல்பட்டு நீதிமன்றத்தில், ஹாசினி கொலை வழக்கின் விசாரணை முடிவுற்றதை அடுத்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

• போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் 

• குற்றவாளி தஷ்வந்த்துக்கு எதிராக ஆள்கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பதிவு

• குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (போக்ஸோ) சட்டத்தில் 4 பிரிவுகளில் குற்றம் நிரூபணம்

• குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்



• கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு மொத்தம் 31 ஆண்டுகளும் தண்டனை : வழக்கறிஞர் கண்ணதாசன்

• தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் : கண்ணதாசன்

• தீர்ப்பைக் கேட்டு, சிறுமியின் புகைப்படத்தை செல்போனில் பார்த்தபடி, கண்ணீர் விட்டு கதறி அழுத ஹாசினியின் தந்தை பாபு

• தனது மகள் கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைத்துள்ளதாக சிறுமியின் தந்தை பேட்டி 

• தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனுக்கு ஆதரவாக மக்கள் முழக்கம்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...