இனி வங்கி அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம்

வங்கிகள் அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வங்கிகள் அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் பொதுத்துறை வங்கிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஒரு கிளையில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதுபோன்று 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஒரு கிளையில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ‘கிளர்க்’ பணியாளர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவின்படி, பாங்க் ஆப் பரோடா பணியை தொடங்கிவிட்டது என தகவல் வெளியாகி உள்ளது.

“மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதிகாரிகளுக்கான இடமாற்றம் விவகாரத்தில் வங்கியின் கொள்கையின்படி, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் எந்தஒரு அதிகாரியும் இருக்க கூடாது, நகராட்சி வரம்புக்குள் உள்பட்ட கிளைகளில் 5 ஆண்டுகளாக இருக்க கூடாது,” என பாங்க் ஆப் பரோடா குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மோசடி நடந்து உள்ளது வெளியே தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு விசாரணை முகமைகள் விசாரித்து வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...