நியாய விலைக் கடையில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது : அமைச்சர்

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவு வழங்கல் மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :-  தமிழகத்தில் இதுவரை 99 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருள்கள் வாங்கும் முறை முழுவதுமாக அமலுக்கு வருகிறது. மார்ச் 1-ம் தேதி ஸ்மார்ட் கார்டு கட்டாயம். இருப்பினும், ஸ்மார்ட் கார்டு இல்லை என்பதற்காக ரேஷன் பொருள்கள் மறுக்கப்படாது. பயனாளர்களுக்குத் தேங்காய் எண்ணெய் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை. எனவே, இந்த மாதம் முதல் நியாயவிலைக் கடைகளில் மசூர் பருப்பு வழங்கப்படாது.

ரேஷன் பொருள்களைக் கடத்துபவர்கள், உணவுப் பொருள்களை வழங்குவதில் மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விவகாரங்கள் தொடர்பாக 1,037 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...