மினி ஆட்டோ மீது ​பஞ்சு லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிழப்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பஞ்சு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.


கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே மினி ஆட்டோ மீது கழிவு பஞ்சு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

அன்னூரில் இருந்து தெக்கலூருக்கு ராஜேஷ்குமார் என்பவர் மினி ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அதில், அன்னூரை சேர்ந்த ராமன் என்பவரும் பயணித்தார். ஆட்டோவை காடுவெட்டிபாளையம் அருகே நிறுத்தி இருவரும் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாவட்டம் அன்னூருக்கு பல்லடத்தில் இருந்து கழிவு பஞ்சு ஏற்றி கொண்டு வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதினால், ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடியது. அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மினி ஆட்டோவின் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் லாரியில் இருந்த கழிவு பஞ்சுகள் ஆட்டோவின் மீது சரிந்தது. அதில், சிக்கி ஒட்டுநர் ராஜேஷ்குமார் மற்றும் அதில் சென்ற ராமன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லாரியில் இருந்த ஜந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் அந்த சாலை வழியே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பஞ்சு பேல் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த அன்னூர் போலீஸார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் விபத்து குறித்த வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...