கோவை உள்ளிட்ட 4 மாவட்டப் பள்ளிகளில் வை-பை வசதி

கோவை, சென்னை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கோவை, சென்னை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 318 பள்ளிகளில் ஏக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நிறுவனத்தின் உதவியுடன் இலவச வை-பை வசதி செய்வதற்கான உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது. இதில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரும், ஏக்ட் ஃபைபர்நெட் நிறுவனத்தின் சார்பில் பாலமல்லாடி, நாராயணன், சுனில் யாஜ்மன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி மார்ச் முதல்வாரம் நிறைவடையும். கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுக்க இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...