காட்டெருமை தாக்கியதில் தோட்ட வேலைக்குச் சென்ற பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அடுத்து கல்லட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில், தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.மேலும், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வனவிலங்குள் சேதப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், இன்று உதகையை அடுத்துள்ள கல்லட்டி அண்ணா நகர் பகுதியில் தோட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த அன்னலட்சுமி (55) என்பவரை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அன்னலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நகர்ப்பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையாகி விட்டதாகவும், எனவே, இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...