எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து உலா வரும் யானைகள்: ஊழியர்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்ட ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்ட ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.



வால்பாறையை அடுத்த பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைக்கூட்டங்கள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, ரேசன் கடைகளை இடித்து சூறையாடுகிறது. அதுமட்டுமில்லாமல், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்துகிறது. இதனால், தொழிலாளர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பகல் நேரங்களிலேயே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், ஊழியர்கள் பீதி உடனேயே பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.



வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...