புகழ்பெற்ற “உதகை இத்தாலியன் கார்டனை" உருவாக்கியது யார் தெரியுமா..?

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான உதகை இத்தாலியன் கார்டன் உருவான வரலாற்றை விளக்கும் தகவல் பலகையை பூங்கா நிர்வாகம் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.

நீலகிரி: நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான உதகை இத்தாலியன் கார்டன் உருவான வரலாற்றை விளக்கும் தகவல் பலகையை பூங்கா நிர்வாகம் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.



உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள உதகை நகரிற்குப் பெருமை சேர்ப்பது நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவாகும். இங்குள்ள பல்வேறு தாவரங்கள் உலகில் ஒருசில நாடுகளில் மட்டுமே காணப்படும் தாவர வகைகளாக உள்ளன. தாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் இத்தாலியன் கார்டன் உள்ளது. இத்தாலிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கார்டனை காணாமல் சுற்றுலா பயணிகள் செல்வதில்லை.



இத்தாலியன் கார்டன் உருவாக்கப்பட்டதில் ஒரு வரலாறு உள்ளது. அந்த வரலாறு பூங்காவை பார்த்து செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஏன் உள்ளூர் மக்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பிலை. இந்த கார்டன் உருவாக்கக் காரணமாக இருந்தது இத்தாலிய கைதிகள் தான். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் தங்களது படையை எதிர்த்து போரிட்ட இத்தாலிய ராணுவ வீரர்களைப் பிணை கைதிகளாகப் பிடித்தது பிரிட்டீஷ் அரசு. அவ்வாறு கைது செய்யப்பட்ட இத்தாலிய கைதிகளை பிரிட்டீஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிற்கு நாடு கடத்தியது. இத்தாலி போன்ற காலநிலை நிலவியதால் கைதிகள் அனைவரும் நீலகிரி மாவட்டத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

அவ்வாறு நாடு கடத்தி நீலகிரியில் சிறை வைக்கப்பட்ட கைதிகள் இத்தாலியன் பூங்காவை வடிவமைத்தனர். சிறிய சிறிய பாத்திகள் அமைக்கப்பட்டு, அதில் பலவிதமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும், பிறை நிலவு வடிவில் சிறியகுளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட இந்த சுவாரஸ்யமான தகவல் நம்மில் பலருக்கு தெரியாது.



இது குறித்து பூங்கா நிர்வாகம் தெரிவிக்கும் போது “வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் பூங்கா நிர்வாகம் சார்பில் இத்தாலியன் கார்டன் நுழைவு பகுதியில், கார்டன் உருவாக்கப்பட்ட முறை குறித்த தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்“.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...