வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

நடிகர் கமலஹாசன் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.,21) தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குகிறார். அன்றைய தினமே மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறார். அப்போது, கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் ஆயத்தமாகி வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறையில் கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “நாளை நமதே” பயணத்தில் இணைந்தவர்களை வரவேற்பது பற்றியும், மாநாட்டிற்கு வால்பாறையின் சார்பாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

இக்கூட்டத்திற்கு பு.கண்ணன் (வால்பாறை நகர பொறுப்பாளர்), சு.செந்தில்நாதன் (வால்பாறை நகர செயலாளர்), பு.ஜெபஸ்டீன் (வால்பாறை நகர பொருளாளர்), மு.அருண் (வால்பாறை துணை செயலாளர்), ரஞ்சித்குமார், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நம் நகர்புறங்களை தூய்மையாக வைப்பது போன்ற நலத்திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...