கார் - வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பலி: 5 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர். 

பல்லடத்தில் இருந்து தாராபுரத்துக்கு கோழி தீவனங்களை ஏற்றிச் சென்ற வேன் கள்ளக்கிணறு அடுத்த மாதப்பூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தாராபுத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார், வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோவை சேரன் நகரைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரின் மனைவி பத்மாவதி (70) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கணவர் ஜெகதீஸ் (78), அறிவழகன் (22) மற்றும் வேனில் வந்த பல்லடம் வேலப்பன் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி (33), தங்கராஜ் (40), நாராயணசாமி (37) ஆகிய 5 பேரும் பலத்த படுகாயம் அடைந்தனர்.



இதைக் கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுவிகள் அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் பல்லடம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காமநாயகன்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...