காணாமல் போன குடிநீர் கிணறுகள்..!, மீட்டெடுக்குமா மாவட்ட நிர்வாகம்...?

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சுவடின்றி மாயமான குடிநீர் கிணறுகளை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சுவடின்றி மாயமான குடிநீர் கிணறுகளை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் ஒன்றரை இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதை தவிர ஆண்டு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதைத் தவிர ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட உதகை நகரின் குடிநீர் ஆதாரங்களான பார்சன்ஸ் வேலி, டைகர் ஹில், மார்லி மந்து, கீழ் மற்றும் மேல் கோடப்மந்து, கோரிசோலா அணைகள் நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் உதகை சாந்தி விஜயா பள்ளி மைதானம், மார்க்கெட் நகர பேருந்து நிலையம், காந்தள் முக்கோணம், பிங்கர் போஸ்ட் பகுதியில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்லட்டி மலைப்பாதை செல்லும் ஜெர்சி பார்ம், முள்ளிக்கொரை உள்ளிட்ட பல இடங்களில் அரசு நிதியுதவியுடன் கிணறுகள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தன.

கடந்த 1990-ம் ஆண்டு வரை பல இடங்களில் கிணற்று நீர் பயன்பாட்டில் இருந்தது. பார்சன்ஸ் வேலி அணை நீர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு கிணற்று நீர் பயன்பாடு மெல்ல, மெல்லக் குறைந்தது. உதகை நகராட்சி தினசரி சந்தையில் கிணறு இருந்த இடத்தில் தற்போது கடைகள் முளைத்துள்ளன. கடந்த 2002-03ம் ஆண்டில் உதகை நகராட்சி சார்பில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தூர்வாரி, பராமரிக்கப்பட்ட கிணறுகள் தற்போது பாழடைந்து கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறியுள்ளன.

உதகை நகரில் வசிக்கும் மக்களை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து குடிநீரை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், நகரில் உள்ள கிணறுகளை தூர்வாரி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும், முறையாகப் பராமரிக்கப்படாத கிணறுகளை மீட்க நகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன் வருமா என்பதே உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...