வரும் 27-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமினை, படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமினை, படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலுவலகம் (மகளிர் திட்டம்) மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு நடத்தும் படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 27-ம் தேதி காலை 08.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகம் வளாகத்தில் அமைந்துள்ள திருமந்திரம் கலையரங்கில் நடைபெறவுள்ளது. 

இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களான ஐ.டி., இன்டஸ்ட்ரிஸ், ஆட்டோ மொபைல் கார்மென்ட்ஸ், கட்டுமானம் மற்றும் விற்பனைத் துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, 8-வது முதல் தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் தவறாது தங்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்களுடன்) கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...