பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 



மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து காங்கேயம் சென்று கொண்டிருந்த திருநெல்வேலி உட்கோட்ட அரசு பேருந்து, தாராபுரம் கோனேரிபட்டி பிரிவில் நேற்று இரவு பழுதாகி நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி கார், சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த சின்ன கருப்புதேவர் (55), செல்லம்மாள் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 



மேலும், ரமேஷ் (30), ஜெயகனி (25), ஹமா (5), அகிலேஷ் (3) மற்றும் கார் ஓட்டுநர் கணேசன் (28) ஆகிய 5 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், ஹமா என்ற 5 வயது பெண் குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, தாராபுரம் போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...