'கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு'

அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய கமலஹாசன், கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய கமலஹாசன், கலாம் பயணம் துவங்கிய இடத்திலேயே எனது பயணத்தை தொடங்கியது பெரும்பேறு எனக் குறிப்பிட்டுள்ளார். 

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை நடிகர் கமலஹாசன் தொடங்கினார். கலாம் வீட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் பேரன் சலீம் அப்துல்கலாம் படம் பொறித்த நினைவுப் பரிசை கமலுக்கு வழங்கினார். அப்துல்கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து கமலஹாசன் வாழ்த்துக்கள் பெற்றார். இதனையடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர், அவர் தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார்.

இந்நிலையில், கலாம் வீட்டுக்குச் சென்றது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக அவர் பதிவிட்டுள்ளார். “பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்”, என கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல் புதிய அரசியல் கட்சியை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்கிறார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...