ஆவினில் கோடை கால மோர் மற்றும் தயிர் அறிமுகம்

கோவையில் உள்ள ஆவின் நிலையங்களில், கோடை கால மோர் மற்றும் தயிர் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் உள்ள ஆவின் நிலையங்களில், கோடை கால மோர் மற்றும் தயிர் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள ஆவின் அலுவலகத்தில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோடை கால மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளின் விற்பனையை ஆவின் பொதுமேலாளர் எஸ். செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



பின்னர், அவர் கூறியதாவது, 'கோடை கால வெயிலால் ஏற்படும் தாகத்தை தணிக்க, கோடை கால மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளோம். மிகக் குறைவான விலையில், இவை விற்கப்பட்டாலும், தரத்தில் மற்ற தயாரிப்புகளை விட சிறந்தவையாகும். நகரில் உள்ள அனைத்து ஆவின் விற்பனை நிலையங்களிலும், இந்த மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கலாம். மேலும், சிறப்பான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 1/2 லிட்டர் தயிர் பாக்கெட்டுகள், வருடம் முழுவதும் ஆவின் நிலையங்களில் கிடைக்கும், 200 மி.லி மோர் பாக்கெட் விற்பனை, வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து தொடரப்படும்' என்றார்.

200 மி.லி. மோர் பாக்கெட் ரூ.7-க்கும், 1/2 லிட்டர் தயிர் பாக்கெட் ரூ. 27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மோர் பாக்கெட் ரூ.5-க்கும், தயிர் பாக்கெட் ரூ. 22-க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...