முதுமலை புலிகள் காப்பகத்தை அலங்கரித்த ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள்

காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் (Flame of Forest) பூக்கள் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் பூக்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி : காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் (Flame of Forest)  பூக்கள் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் பூக்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன. முதுமலை வனப்பகுதியில் தற்போது வறட்சி துவங்கியுள்ள நிலையில், வன முழுவதும் காய்ந்து காணப்படுகின்றது. இந்த நிலையில், காய்ந்த வனங்களுக்கு இடையே தீப்பற்றி எரிவது போல அந்தப் பூக்கள் காட்சியளிக்கின்றன. தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வனப்பகுதியில் தீ எரிவது போன்ற தோற்றத்தை இந்த பூக்கள் ஏற்படுத்துவதாலே, இதற்கு ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் எனப் பெயர் வந்தது. 

ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்த கூடிய பூ என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தப் பூக்கள் வனப்பகுதியில் பூத்தால் வசந்தகாலம் முடிந்து வறட்சி துவங்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவற்றை தாண்டி ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் வறட்சி காலங்களில் பறவைகள் மற்றும் அணில், குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு உணவு அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த மரங்களை சுற்றி ஏராளமான பறவைகளை எந்நேரமும் காண முடிகின்றது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...