கீரனூர் கும்பாபிஷேகத்துக்கு செல்கிறது கௌசிகா நதியின் புனித நீர்

திருப்பூர் மாவட்டம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கோவையில் உற்பத்தியாகும் கௌசிகா நதி புனிதநீர் எடுக்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கோவையில் உற்பத்தியாகும் கௌசிகா நதி புனிதநீர் எடுக்கப்பட்டது. 



கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்காக, குளத்துப்பாளையம், கிட்டாம்பாளையம், வாகராயம்பாளையம், காரைக்கால்பாளையம், கணபதிபாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம் சார்ந்த பகுதிகள் சார்பாக புனித நீர் எடுத்து செல்லப்படுகிறது. இதையடுத்து, வரும் 25-ம் தேதியன்று நடைபெறும் பூஜைக்கு புனித நதி தீர்த்தங்களுடன் கும்பாபிஷேக கலச பூஜை நடைபெறும். 



இந்த நிகழ்வுக்கு கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகில் உள்ள குருடிமலையில் உற்பத்தியாகும் கெளசிகா நதியில் தீர்த்தம் எடுத்துவர  குளத்துபாளையம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஆதி, தேவேந்திரன் மற்றும் 6 குலமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, குருஅருள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கௌசிகா நதி தீர்த்தக்குடங்கள் எடுத்துவரப்பட்டன.

மாபெரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நமது கெளசிகா நதி தீர்த்தமும் இடம்பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும், உறுதுணையாக  இருந்த  அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...