உதகை படகு இல்லத்தில் 5 மொழிகளில் தகவல் பலகைகள்

வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.



சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் இருப்பாதால் கேரள மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  



பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சுற்றுலா பயணிகளுக்காக முதன்முறையாக உதகை படகு இல்லத்தில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, படகு இல்ல நுழைவாயில் பகுதியில் மட்டும் இந்த 5 மொழி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் படகு இல்லத்தில் முக்கிய பகுதிகளை குறிக்கும் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக படகு இல்ல நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...