ஆன்-லைனில் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடம்

ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார்.

கோவை: ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சந்தை நிலவரத்தைக் காட்டிலும் குறைவான விலை, நம்பகதன்மை, உரிய நேரத்தில் டெலிவரி ஆகியவற்றால் மக்களிடையே ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். ஆண்டுதோறும் ஆன்-லைன் மூலம் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதில், தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அமேஸான் மூலம் கிடைக்க பெறுவதால், எங்களது சேவையில் தமிழகம் மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது. இங்கு, ஐந்து தன்னிறைவு மையங்களும், சேமிப்பு கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களில் முன்னணி நிறுவனங்களான சாம்சங், வோல்டாஸ், எல்.ஜி. மின்னனு பொருட்களை அதிகம் வாங்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் குளிர்சாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. என்றார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...