இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே 13 இலக்க எண்கள் : பி.எஸ்.என்.எல்.,

நாடு முழுவதும் தொலைப்பேசி எண்கள் இனி 13 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொலைப்பேசி எண்கள் இனி 13 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்பட இருப்பதாகவும், எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்த தகவல்களுக்கு அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை உரசி பணம் எடுக்கும் இயந்திரங்கள், சிறிய எலக்ட்ரிக் மீட்டர், மற்றும் இண்டர்நெட் பயன்பாடுள்ள இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகள் போன்ற இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...