ஆசிரியர் திட்டியதால் குளிர் பானத்தில் எலி மருந்து கலந்து குடித்த மாணவிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஐந்து மாணவிகள் ஒன்றாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஐந்து மாணவிகள் ஒன்றாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையிலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் 5 பேரை ஆசிரியர் நேற்று திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த ஐந்து பேரும் கடையில் எலி மருந்தை வாங்கி, வகுப்பறையிலேயே வைத்து குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விடவே அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த ஐந்து பேரையும் பள்ளி நிர்வாகம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அந்த ஐந்து மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனை சென்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.



அப்போது அங்கிருந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...