"பள்ளி மாணாக்கர்கள் கோவை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்"

கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலாவுடன், கோவை குறித்த வரலாற்றினை தெரிந்து கொள்வதும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலாவுடன், கோவை குறித்த வரலாற்றினை தெரிந்து கொள்வதும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.,23) சுற்றுலாத் துறையில் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சுற்றுலா செல்வதற்கான வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 150 பள்ளி மாணவ, மாணவியர்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்து, சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, இன்று கோவை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் படிப்பில் சிறந்த ஏழை மாணவ, மாணவியர்களை சுற்றுலாத் துறையுடன், கல்வித்துறையும் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளன.

இச்சுற்றுலாவில், பள்ளி மாணவ, மாணவியர்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஜி.டி.நாயுடு தொழில்அருங்காட்சியகம், வனத்துறை அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி, குடிநீர் மற்றும் சுற்றலாவிற்கான பேருந்து வசதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சுற்றுலா பயணத்திற்கு மாணவ, மாணவியர்களை ஆபத்தில்லா இடங்களுக்கு அழைத்துச்செல்ல ஒவ்வொரு பேருந்திலும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்காக பங்கேற்பார்கள். சுற்றுலாவின் போது மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுலா சார்ந்த வினாடி, வினா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும். மேலும், இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இச்சுற்றுலாவில் தாம் பெற்ற அனுவத்தினை கருத்து படிவமாக மாணவ மாணவியர்களிடமிருந்து சேகரிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சதிஷ்குமார், மண்டல மேலாளர் உதகை மண்டலம் டாக்டர் என்.கே முரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜய்யண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...