கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் : வீரபாண்டியன்

புதியதாக அரசியல் கட்சியை துவங்கி உள்ள கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை: புதியதாக அரசியல் கட்சியை துவங்கி உள்ள கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த நேருநகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கிழக்கு மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது :- காவிரி நதிநீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இருப்பது நல்ல விஷயமாக அமைந்து உள்ளது. விரைவில் பேசி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது. இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். 

புதிய கட்சியை தொடங்கியுள்ள கமலஹாசன் இடதுசாரியும் அல்ல, வலது சாரியும் அல்ல என கூறி இருப்பது அரசியலே இல்லை. அவர் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை முறையாகக் கூற வேண்டும். என்றார். 

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கிழக்கு மண்டல மாநாட்டில், கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும், பாதாள சாக்கடை பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...