காரமடை அரங்கநாதர் கோவிலில் கொடியேற்று விழா : பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா முழக்கம்

கோவை காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகாத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை: கோவை காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகாத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 



கொங்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற வைனவத்திருத்தளமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா திருத்தேரோட்டம் நிகழ்ச்சியினை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் உற்சவ மூர்த்தியாக கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளி கருடாழ்வாருக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். அதன்பின்னர், கோவில் கொடிமரத்தின் அடியில் உள்ள கருடாழ்வருக்கு பால், திருமஞ்சனம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 



இதனைத் தொடர்ந்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியை கோவில் பட்டர் மற்றும் பொதுமக்கள் கோவிலை சுற்றி எடுத்து வலம் வந்தனர். பின்னர், மதியம் பன்னிரெண்டு நாற்பது மணிக்கு அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் மற்றும் தாசர்களின் சங்கொலி முழங்க கருடாழ்வார் கொடி அரங்கநாதர் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...