ஏர்செல்லில் 60 சதவீத பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன : தென்மண்டல சி.இ.ஓ

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சிக்னல் இன்றி முடங்கி கிடந்த ஏர்செல் நிறுவனத்தின் பிரச்சனைகள் 60 சதவீதம் சரிசெய்யப்பட்டு விட்டதாக அதன் தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சிக்னல் இன்றி முடங்கி கிடந்த ஏர்செல் நிறுவனத்தின் பிரச்சனைகள் 60 சதவீதம் சரிசெய்யப்பட்டு விட்டதாக அதன் தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மிகப்பெரிய மொபைல் ஆப்ரேட்டர் சர்வீசராக இருந்தது ஏர்செல் நிறுவனம். கிராமங்களில் முதல் முதலாக டவர் அமைத்து செல்போன் இணைப்புகளை அளித்ததால், இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உருவாகினர். கோவை யம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தமிழக ஏர்செல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் சர்வீஸ் வழங்கிவந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் அலைவரிசைகளை டவரோடு சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டு அங்கு செயல்பட்ட தனது கிளைகளை மூடியது.

தமிழகத்தில் ஏர்செல் தனது சேவையை வழங்கும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் அதன் வாடிக்கையாளர்கள் தவித்து வந்தனர். மேலும், ஏர்செல் நிறுவனத்தின் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ஏர்செல் முடங்கியதால், அதன் வாடிக்கையாளர்கள் போர்ட் உதவியுடன் வேறு தொலைதொடர்புக்கு மாறினர். மேலும், சிலர் நேரடியாக சென்று தங்களது நெட்வொர்க்கை மாற்றினர். இந்தப் பிரச்சனையால், கடந்த ஒருவாரத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏர்செல் நிறுவனம் இழந்தது. இந்த சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். 

இந்த நிலையில், தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் கூறியதாவது:- ஏர்செல் செல்போன் சேவை சீராகி வருகிறது. குத்தகைக்காரர்களுடன் ஏற்பட்ட சமரசப் பேச்சுக்குப் பின் முழுவீச்சில் செல்போன் டவர்கள் சீர் செய்யப்படும். 60 சதவீத பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விட்டன. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் முழுவதும் சரி செய்யப்பட்டு விட்டது. ஏற்கனவே, அறிவித்தது போல் இன்னும் 2 நாளில் நிலைமை சீரடையும். வாடிக்கையாளர்கள் மொபைல் போனை அனைத்து விட்டு மீண்டும் இயக்க வேண்டும். ஏர்செல் நிறுவனத்தை பயன்படுத்தபவர்கள் வேறு நிறுவனங்களை அணுக வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...