சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

அரசு அலுவலகங்களின் சுவர்களில் சட்டவிரோதமாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை : அரசு அலுவலகங்களின் சுவர்களில் சட்டவிரோதமாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் தனியார்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்படுவது காணப்படுகின்றது. அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்களிலோ, அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் மீதோ, அரசு அலுவலக வளாகங்களிலோ தனியார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சுவற்றில் எழுதுவதோ, விளம்பரப் பலகைகள் வைப்பதோ சட்டத்திற்கு புறம்பான செயல்களாகும். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனவர்கள் மீது தமிழ்நாடு ஓபன் பிளேஸின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...