கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேரப் போக்குவரத்துக்கு அனுமதி

நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மலைப் பாதைகளையும், அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மாவட்டமாகும். குறிப்பாக, கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைகளை கொண்ட மலைப் பாதையாகும். இந்த மலைப்பாதையில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், இந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லவும், இரவு 9 மணிக்கு மேல் வாகனங்களை இயக்கவும் தடை விதித்தது.

இந்த நிலையில், உதகையை அடுத்த மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி இன்று முதல் அப்பகுதில் கோவில் திருவிழா களைக் கட்டியுள்ளது. ஆகவே, இந்தக் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் கல்லட்டி மலைப்பாதையில் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பலத்த பாதுகாப்புடன், காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுரைகள் வழங்கிய பின்னரே, கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...