கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்கிய உரிமையாளர்கள்

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கான நிலத்தை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருசில உரிமையாளர்கள் அரசுக்கு இடத்தை கொடுத்துள்ளனர்.

கோவை : கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கான நிலத்தை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருசில உரிமையாளர்கள் அரசுக்கு இடத்தை கொடுத்துள்ளனர். 

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦10-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, விரிவாக்கப் பணிக்காக எடுத்துக்கொள்ளும் இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், மக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பும் வந்தது. அதனை வழங்க முன்வராத மாநில அரசு, நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையே நடத்தி வந்தது. இதனால், நிலம் கிடைக்காத காரணத்தால், கோவை சர்வதேச விமான நிலையத்தை, விரிவாக்கம் செய்வது, தொடர்ந்து தாமதமாகி வந்தது. 

இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்க ஒருசில நில உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். இருகூர் மற்றும் காளப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பிளாட்களை அரசு கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதாவது, எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனியில் உள்ள குடியிருப்பு பகுதி நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900 -யும் வழங்கப்பட்டது. காளப்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் பகுதி மக்கள் அரசின் முந்தைய விலையையே ஒப்புக் கொண்டு இடத்தை வழங்கியுள்ளனர். 

இதனிடையே, எஞ்சிய நில உரிமையாளர்களில் ஒருவர் கூறுகையில், ''சதுர அடிக்கு ரூ. 3,000 கொடுத்தால் இடத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்,'' என்றார்.   

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...