வனங்களில் தனியாக நடமாடும் யானைகளை கண்டறிவதற்கான பயிற்சி

கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனச்சரகத்தில் தனியாக நடமாடும் காட்டு யானைகளை அடையாளம் கண்டறியும் முறை குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனச்சரகத்தில் தனியாக நடமாடும் காட்டு யானைகளை அடையாளம் கண்டறியும் முறை குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளின் வனச்சரகங்களில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உலகளாவிய இயற்கைக்கான நிதியம் சார்பில் [WWF] யானைகளின் நடமாட்டத்தையும், அதன் எண்ணிக்கை மற்றும் இயல்புகள் குறித்து துல்லியமாக கண்டறிதல் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து இடம் மாறியபடி சுற்றி வரும் யானைகளை சரியாக கணக்கிடுவது எப்படி, வேளாண் பயிர்களை உண்டு பழகியதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் விளைநிலங்களை நோக்கிப் படையெடுக்கும் யானைகளைக் கண்டறிதல் போன்ற பயிற்சிகளும் வனத்துறையினருக்கு அளிக்கப்பட்டது. மேலும், வனங்களில் தனியாக நடமாடும் யானைகளை, காதுகளின் வித்தியாசம், வெள்ளை படலம், கட்டிகள், புண், வடுக்கள் மற்றும் வால் ஆகியவற்றை வைத்து வகைப்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டது. 

இது தொடர்பாக உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தைச் சேர்ந்த பூமிநாதன் பேசுகையில், ஆண் யானைகளை அடையாளப்படுத்துவது கடினமான பணியல்ல. அதன் தந்தங்களை வைத்து எளிதாக வகைப்படுத்த முடியும். ஒவ்வொரு யானைகளுக்கும் தந்தங்கள் வேறுபடும். பெண் யானைகளை அடையாளம் காண்பது சற்று கடினம். ஏனெனில், அவற்றிற்கு தந்தங்கள் கிடையாது. என்றார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...