தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது. 

இராசவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ப. அன்புச்செழியன் தலைமையில் 'தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் நீட்சியும்', 'தமிழ் இலக்கணப் பிழைகளைக் கண்டறிதல், களைதல்', 'மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்தல், வளர்த்தல்' போன்ற தலைப்புகளிலும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நூறு தமிழாசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் உலகத் தமிழ்சங்க இயக்குநர் கா.மு. சேகர், கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர், அரவிந்த் சுப்பிரமணியன், தமிழாசிரியர் (பணிநிறைவு), மா.தமிழ்ப்பெரியசாமி, அரசுக் கலைக் கல்லூரி இணைப்பேராசிரியர், இ.சேனாவரையன் மற்றும் தமிழாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...