காதலர் தினப் பரிசாக கணவருக்கு கல்லீரல் தானம் செய்த மனைவி

கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



பெரம்பலூரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (36) மற்றும் அவரது மனைவி நிஷா (34). கல்லீரல் செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த ஜாகீர் உசேன், மாற்று கல்லீரல் சிகிச்சைக்காக கடந்த 13-ம் தேதி கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருடைய மனைவி நிஷா, தனது கணவருக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து, இன்று நடைபெற்ற அறுவை சிகிச்சையில், நிஷாவின் கல்லீரல், ஜாகீர் உசேனுக்கு மாற்றி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 



இது தொடர்பாக பேசிய ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் பழனிவேலு கூறுகையில், "பிரான்சில் முதல்முறையாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதைத் தொடந்து, கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த சிகிச்சை பிரபலமானது. இந்த நிலையில், இந்தியாவில், முதல்முறையாகக் கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது," என்றார். 

காதலர் தினத்தையொட்டி, ஒவ்வொருவரும் விலைமதிப்பு மிக்க பொருட்களை வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...