ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

சொத்து தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: சொத்து தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் மைக்கேல் ஜோசப். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு அயோனா(11), ஸ்டெபினி(10) என்ற இரு மகள்கள் உள்ளனர். ஜோசப்-ன் மனைவி அவரைப் பிரிந்து திருப்பூரில் பணி புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஜோசப் தான் வைத்திருந்த பேனா கத்தியைக் கழுத்தில் வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரிடம் இருந்து பேனா கத்தியை பிடுங்கி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் ஜோசப்-ஐ மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, ஜோசப்-ன் சகோதரி அவருக்கு சேர வேண்டிய சொத்தை தராமல் ஏமாற்றுவதாகவும், இது தொடர்பாக கேட்டால் ஆட்கள் வைத்து மிரட்டுவதாகவும், அதனாலேயே தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. 

கடந்த சில மாதங்களாக மனு அளிக்க வருபவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மனு அளிக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற தற்கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...