கணவரின் இறுதி ஊர்வலத்தில் கைக்குழந்தையுடன் ராணுவ உடை அணிந்த பெண்ணின் கம்பீர நடை

பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் கம்பீர நடை போட்டு வந்த பெண் அதிகாரியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் கம்பீர நடை போட்டு வந்த பெண் அதிகாரியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டரான டி.வட்ஸ் மற்றும் அவரது மனைவி மேஜர் குமுத் மோர்கா. கடந்த பிப்., 15-ம் தேதி அசாமில் நடந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் கமாண்டர் டி.வட்ஸ் உயிரிழந்தார். அவரது மனைவியான ராணுவ மேஜர் குமுத் மோர்கா, அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், வட்ஸ் இறந்த சில நாட்களில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் தனது கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கனத்த இதயத்துடனும், கம்பீர நடையுடனும் குமுத் மோர்கா கலந்து கொண்ட நிகழ்வு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...