ஜெ., 70-வது பிறந்த நாள் விழா : கோவையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். 



மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்க இருக்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.



இந்த நிலையில், கோவை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை பகுதிக்கு ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க.,வினர் அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 



மேலும், இன்று மதியம் கோனியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சியும், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. 



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...