ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது

கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இன்று ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இன்று ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் ஆண்டு தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விட்டு வருகிறது. இந்த ஆண்டு பி.ஏ.பி. திட்டத்தில் சராசரியை விட குறைவான மழையே பெய்தது. இதனால், கேரளத்திற்கு திறந்து விடும் நீரை தமிழக அரசு குறைத்தது. இதனைக் கண்டித்து கேரளா விவசாயிகள் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.

நேற்று தமிழக-கேரள எல்லையில் கேரள எம்.எல்.ஏ கிருஷ்ணகுட்டி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இந்த திடீர் முற்றுகையையடுத்து நகைக்கடை மூடப்பட்டது.  தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...