வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து : தீயை அணைப்பதில் மாநகராட்சி அலட்சியம்

கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 



வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 654 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு உள்ளது. இதில், 238 ஏக்கர் பரப்பளவில் குப்பை பரவி காணப்படுகிறது. மாநகராட்சியின் 100 வார்டுகளில் தினசரி 850 டன் வரை குப்பை சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் குப்பைக்கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொழுந்துவிட்டு எரிகின்றன. இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணயில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் வண்டிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைப்பதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். சுமார், 3 1/2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து எரிந்து வரும் இந்த தீயினை முழுவதுமாக அணைக்க சுமார் 2 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. 

இதனிடையே, குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அவ்வப்போது பயங்கர வெடிசத்தமும் கேட்பதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...