நிலத்தடி நீரை சேகரிப்பதில் கவனம் செலுத்தும் சிறுதுளி அமைப்பு

தமிழகத்தில் நிலத்தடி நீரின் வளம் கவலையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

கோவை : தமிழகத்தில் நிலத்தடி நீரின் வளம் கவலையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது. 



இந்தியாவில் பல்வேறு இடங்களில் போதிய அளவு மழை பெய்துள்ள நிலையிலும், இப்போதும் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், நிலத்தடி நீரையே விவசாயிகளும், பொதுமக்களும் நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர் குறைபாடுக்கு மக்கள் தொகைப் பெருக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. அதேவேளையில், சாலைகள் மற்றும் திறந்த வெளிப்பகுதிகளில் விழும் மழைநீர் பாதாள சாக்கடையில் கலந்து மாசடைவதுடன், பிற பகுதிகளுக்கும் பரவி சீர்கேட்டை உருவாக்குகின்றது. எனவே, நிலத்தடி நீரை சீரமைக்கும் முயற்சியாக, கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சேகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது, வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 



கோவையில் பாறைகள் நிறைந்த பகுதிகளில் போர்வேல் மூலம் மழைநீர் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் மாநகராட்சி, சிஜிடபூள்யூ, கோவை ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 600-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மழைகாலங்களில் நிலத்தடி நீர் சேகரிக்கப்படுகிறது. சிறுதுளி அமைப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...