கேரளாவில் வாலிபர் அடித்துக் கொலை : பழங்குடியின் மக்கள் சாலைமறியல்

கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



 

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியில் கடுகுமன்னா பகுதியில் திருடன் எனக் கூறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் மது (27) என்ற வாலிபர் கடந்த இருதினங்களுக்கு முன்பு பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலை அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, உடலைப் பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் அகலி பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையறிந்த, கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பா.ஜ.க., கேரள மாநிலத் தலைவர் மற்றும் அத்தொகுதி சி.பி.எம்., எம்.எல்.ஏ.,க்கள் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர். மேலும், கேரள அரசு அறிவித்த ரூ. 10 லட்ச ரூபாய்க்கு பதிலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் சென்னிலா, இதுபோல, ஆதிவாசியின மக்கள் கேரளத்தில் பாதிக்கப்படக்கூடாது என்றார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...