2 வயது சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த பரிதாபம்

நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது. 

மலை மாவட்டமான நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது, சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான வேல்வியூ பகுதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி ஒன்று வாகனத்தில் அடிப்பட்டு இருந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த சிறுத்தைப்புலியின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மலை மாவட்டங்களில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் பலியாகி வருவதாகவும், இதுபோன்று நிகழ்ந்தால்,   சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...