தெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

நேபாள நாட்டில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.


கோவை : நேபாள நாட்டில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

நேபாள ஒலிம்பிக் சங்கம் சார்பில் ஐந்தாவது தெற்காசிய டேக்வாண்டோ போட்டி நேபாள நாட்டில் உள்ள கன்சன்பூர் உள் அரங்கில் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் தமிழகம், டெல்லி மற்றும் பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 70 வீரர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், பல்வேறு எடை பிரிவுகளில் 6 வீரர், வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 54 கிலோ சீனியர் ஆண்கள் எடை பிரிவில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.அஜயும், 55 கிலோ ஜூனியர் எடை பிரிவில் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஏ.அஜயும், 45 கிலோ ஜூனியர் எடை பிரிவில் லிசிக்ஸ் பள்ளி மாணவர் ஆதிஷ், 59 கிலோ எடை பிரிவில் செளடேஸ்வரி வித்யாலயா பள்ளி மாணவர் ஸ்ரீஹரன், 52 கிலோ ஜூனியர் பெண்கள் பிரிவில் அதே பள்ளியைச் சேர்ந்த அவந்திகாவும், 42 கிலோ பிரிவில் பிரமிதா ஆகியோர் 6 தங்கப் பதக்கங்களை வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரோட்டரி கேலக்ஸி சங்கம் சார்பில் கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை கோவை மாவட்ட ரோட்டரி சங்கத்தின் உதவி கவர்னர் கோகுல்ராஜ், முன்னாள் உதவி கவர்னர் முத்துராமன் ஆகியோர் வழங்கினர். 

பரிசளிப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரர் ஸ்ரீஹரன் கூறும்போது, "போட்டிகள் சற்று கடினமாக இருந்தது. குளிர் அதிகமாக இருந்தது", என்றார்.  

54 கிலோ சீனியர் ஆண்கள் எடை பிரிவில் தங்கம் வென்ற எஸ்.அஜய் கூறியதாவது :- இந்த வெற்றிக்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்தியாவிற்கு தங்கம் வெல்வதே தனது லட்சியம். இவ்வாறு கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...