மின்கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த நபரால் பரபரப்பு

மின் கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த எலக்ட்ரிசன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின் கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த எலக்ட்ரிசன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூருவைச் சேர்ந்த எலக்ட்ரிஷன் அய்ரின் என்பவர், தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள தனது மனைவியைப் பார்க்க பேருந்தில் வந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பேருந்து வந்தபோது, உடல்நலக்குறைவு காரணமாக, சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்ரின் திடீரென்று தன்னைக் கொல்ல வருவதாகக் கூறி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி, மேட்டூர் சாலையில் ஓடியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அவர் திடீரென அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறினார். பின்னர், அப்பகுதி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்புதுறை வரவழைக்கப்பட்டு அவரை கீழே இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மின்கம்பியிலேயே அய்ரின் அங்கும், இங்கும் ஓடியதால் கீழேஇறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட அவர், மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...