'பார்க் 2018' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பதானி

பார்க் கல்லுரி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமாங் பதானி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

கோவை : பார்க் கல்லுரி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமாங் பதானி பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 



கணியூரில் உள்ள பார்க் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 

பார்க் குளோபல் பள்ளியில் பயிலும் மாணவி வைஷ்ணவியின் யோகா நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் பேசிய, பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்று வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டி20 கிரிக்கெட் பயிற்சி முகாமில் 30 உறுப்பினர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்ட பி.சி.டி. மாணவர்கள் மூவரையும் பாராட்டினார். 

மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 15 வருடங்களாக, பல்கலைக்கழகம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெறும் மாணவரின் அந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை பார்க் கல்வி நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் நடைமுறை​யையும் அவர் அறிவித்தார். 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் ​பதானி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அப்போது, பேசிய அவர், பல இடங்களுக்குச் சென்று மாணவர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிப்பதனை தமது விருப்பமாகத் தெரிவித்தார். கல்விக்கு இணையாக விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...