சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி

மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட முன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட முன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த மூடுதுரை மீனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கோகுல கண்ணன் ( 21) தமிழ்ச்செல்வன் (21) தமிழ்வாணன் (22). இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் நேற்று காரமடைக்கு சென்று கொண்டிருந்தனர். செங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார்(31), சித்ரா (38), தன்சிகா(6), சாவித்திரி ஆகியோர் அவர்களது இரு சக்கர வாகனத்தில் புளியம்பட்டி சென்று கொண்டிருந்தனர் .

அவர்களது வாகனம் மூடுதுரை பேருந்து நிலையம் அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஆனால், கோகுலக்கண்ணன், மகேஷ்குமார் மற்றும் குழந்தை தன்சிகா ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர், மற்ற மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...