சிறுவாணி அணை விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண வைகோ வலியுறுத்தல்

ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.


கோவை: ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். ஆழியாறு பிரச்சனையை அரசு கவனமாக கையாள வேண்டும். இந்த பிரச்சனையை மையமாக வைத்து கேரளா அரசு சிறுவாணியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். 

அட்டப்பாடியில் ஆதிவாசி வாலிபர் மது-வை தாக்கி கொலை செய்தவர்கள் மீது பினராயி விஜயன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு சர்வாதிகாரி போல் உள்ளது. சங் பரிவார் அமைப்புகளின் ஊது குழலாக மோடி செயல்படுகிறார். எல்லா மட்டங்களிலும் இந்தியை மத்திய அரசு திணிக்கின்றது. பன்முக தன்மையை எல்லா விதத்திலும் சிதைக்கிறது. அ.தி.மு.க.,வை அரசியல் ரீதியாக மட்டும் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதே நேரத்தில் முதலமைச்சர் இருக்கிற போது அரசு செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் இடைத் தரகரா அல்லது என்ற கேள்வி எழுந்துள்ளது." என்றார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...