யானைகள் முகாமில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சிக்காக ஒப்படைப்பு

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பத்தாவது யானைகள் நலவாழ்வு முகாம் கடந்த மாதம் நான்காம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 31 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்றன. இந்த முகாம் கடந்த 20-ம் தேதி நிறைவடைகிறது. இதனால், முகாமில் பங்கேற்ற யானைகள் பலத்த ஏற்பாடுகளுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 



இந்த நிலையில், யானைகள் முகாம் நடைபெற்ற பகுதியில் பிளாஸ்டிக், பாலிதீன் & பாட்டில்கள் என 53 மூட்டை அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி மற்றும் வனப்பணியாளர்களுடன் இணைந்து நேட்சுரல் லவ்வர்ஸ் என்னும் தன்னார்வ அமைப்பினர்கள் 65 பேர் இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இக்கழிவுகள் இன்று நகராட்சி வசம் மறுசுழற்சிக்கு வழங்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...