வெள்ளைப் பூண்டு விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை

வரத்து அதிகரிப்பால் நீலகிரி வெள்ளைப் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது

நீலகிரி: வரத்து அதிகரிப்பால் நீலகிரி வெள்ளைப் பூண்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.



நீலகிரியில் அதிகளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுவை மிகுந்த நீலகிரி பூண்டுக்கு பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் கிராக்கி ஏற்பட்டு வருகிறது. கிலோவுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அதிக அளவு விவசாயிகள் வெள்ளைப் பூண்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை மட்டுமே வெள்ளைப் பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து மேலும் அதிகாரிக்கும் என்பதால் விலை வீழ்ச்சி தொடரும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் பிற மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் பூண்டு விவசாயம் கை கொடுத்த நிலையில் தற்போது பூண்டு விலையும் வீழ்ந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இதனால் உதகை அருகேயுள்ள ஆடாசோலை, கடநாடு, காவிலோரை, எப்பநாடு, தொரையட்டி சுற்று வட்டாரத்தில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...