திருப்பூரில் வாலிபர் மர்ம மரணம் : கொலையா..? தற்கொலையா..? என விசாரணை

திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தாராபுரம் சாலையில் கரட்டாஙகாடு, தில்லை நகர் 3-வது வீதியைச் சேர்ந்த தந்தை முத்துச்சாமி மற்றும் தாயார் ருக்மணி ஆகியோரின் மகன் ரவி. இவரது தந்தை, தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், ரவி தனது சகோதரி இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இவர், கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் நேற்று இரவு கரட்டாங்காடு மெயின் ரோடு அருகில் ரவி மர்மமான முறையில் இறந்துள்ளார். காலையில் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் உதவியுடன் விசாரித்து வருகின்றனர். அருகில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருவதால் மேலே இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் திருப்பூர் தெற்கு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...