கல்லட்டி மலைப்பகுதியில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு போலீஸார் அறிவுரை

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை எவ்வாறு இயக்குவது குறித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை எவ்வாறு இயக்குவது குறித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை கல்லட்டி மலைப்பாதையாகும். இந்த மலைப்பாதையில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இரவு 9 மணிக்கு வாகனங்கள் செல்லவும், கனரக வாகனங்கள் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில், உதகையை அடுத்த மசினகுடி பகுதியில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் திருத்தேர் விழாவை முன்னிட்டு நேற்று முதல் திருவிழா கோலாகாலமாக களைக் கட்டியுள்ளது. இதனையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க கல்லட்டி மலைப்பாதை வழியாக இரவு 9 மணிக்கு மேல் இரவு நேர போக்குவரத்திற்கு பல கட்டுப்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. 



மேலும், கல்லட்டி வாகன சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் 1 மற்றும் 2-வது கியரில் தான் செல்ல வேண்டும், வழிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது மற்றும் வழியில் யாரவது வாகனங்களை நிறுத்தினால் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். மேலும், விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...